BREAKING NEWS

Useful Links

.

R.L LIST- 2015

சனவரி
11.01.2014 - சனி: வைகொண்ட ஈகாதசி
13.01.2014 - திங்கள்: போகி பண்டிகை
17.01.2014 - வெள்ளி: தை பூசம்
பிப்ரவரி
13.02.2014 - புதன்: சாம்பல் புதன்
21.02.2014 - செவ்வாய்: கார்வின் காதர் 15.02.2014 - சனி: மாசிமகம்
27.02.2014 - வியாழன்: மகாசிவராத்திரி
மார்ச்
04.03.2014 - செவ்வாய்: பகவான் வைகொண்ட ஆராதனை
05.03.2014 - புதன்: சாம்பல் புதன்
ஏப்ரல்
14.04.2014 - திங்கள்: அம்பேத்கார் பிறந்த தினம்
17.04.2014 - வியாழன்: பெரிய வியாழன்
20.04.2014 - ஞாயிறு: ஈஸ்டர்
மே
14.05.2014 - புதன்: புத்த ஜெயந்தி /சித்ரா பௌர்ணமி
26.05.2014 - திங்கள்: ஷபேமிராஜ்
ஜூன்
13.06.2014 - வெள்ளி ஷபேபராஅத்
29.06.2014 - ஞாயிறு: ரம்ஜான் நோன்பு முதல் நாள்
ஜூலை
24.07.2014 - வியாழன்: ஷபே காதர்
ஆகஸ்டு
13.08.2014 - ஞாயிறு: ஆடிப்பெருக்கு
08.08.2014 - வெள்ளி: வரலஷ்மி விரதம்
10.08.2014 - ஞாயிறு: ரிக் உபகர்ம /யஜூர்உபகர்ம
11.08.2014 - திங்கள்: காயத்ரி ஜெபம்
29.08.2014 - வெள்ளி: சாம உபகர்ம
செப்டம்பர்
07.09.2014 - ஞாயிறு: ஓணம் பண்டிகை
அக்டோபர்
04.10.2014 - சனி: அர்ஃபா
22.10.2014 - புதன்: தீபாவளி நோண்பு
26.10.2014 - ஞாயிறு: ஹிஜ்ரி 1436 ஆம் வருட பிறப்பு
நவம்பர்
02.11.2014 - ஞாயிறு: கல்லறைத் திருநாள்
06.11.2014 - வியாழன்: குருநானக் ஜெயந்தி
டிசம்பர்
12.2014 - வெள்ளி: கார்த்திகை தீபம்
06.12.2014 - சனி: ஆருத்ரா தரிசனம்
24.12.2014 - புதன் கிருஸ்துமஸ் ஈவ்
31.12.2014 - புது வருட ஈவ்

Saturday, 15 November 2014

பிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது!!!

ஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறதுகுழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின் கிஷன் ஆகியோருக்கு, இம்முறை, ’ஹொய்சாலா விருது’ வழங்கப்படுகிறது.

குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில், தாய் இறந்து விட்டாலும், மன உறுதியை கைவிடாமல், தன், 8 மாத தம்பியை தூக்கிக் கொண்டு, இரவு வேளையில், அபாயமான கிருஷ்ணா நதி ரயில்வே பாலத்தை தாண்டி வந்த, முத்தோலின் சுமித்குமார் சிந்தகி; மலையேறும் சாகசத்தில் ஈடுபட்டபோது, வழுக்கி விழுந்த நண்பனை காப்பாற்றிய அனூப், ஸ்வரூப்; கல்லால் சிறுத்தையை அடித்து விரட்டி, இருவரை காப்பாற்றிய குண்டுலுபேட்டை தாலுகா குந்தகெரேயை சேர்ந்த அப்பு; வாகன விபத்தில், சிக்கிக் கொண்டிருந்த தன்னுடன் படிக்கும் மாணவர்களை காப்பாற்றிய, மாகடி தாலுகாவின் குதூரு கிராமத்தின் சஹகேஷ் ஆகியோருக்கும் ’ஹொய்சாலா’ விருது வழங்கப்படுகிறது.



கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, விபத்தில் சிக்கியவர்களை மீட்ட, விஜாபூரின் பூர்ணிமா; ஏரியில் தவறி விழுந்த, 10 வயது சிறுவனை காப்பாற்றிய சோமவாரபேட்டையின் சாந்தி ஆகியோருக்கு, சிறுமியருக்கு வழங்கும் வீரசாகச விருதான, ’சென்னம்மா’ விருது வழங்கப்படுகிறது. குழந்தைகள் தினமான இன்று, விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர். இவ்விருது, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கேடயம், சான்றிதழ் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

 
Copyright © 2014 கல்விக்குரல்
Developed by IWC. Powered by Blogger