'தமிழகத்தில்பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது' என ஆந்திர கல்விகுழுவினர் தெரிவித்தனர்.கல்வி தரத்தை உயர்த்தும்நோக்கில், கல்வி மேம்பாடு அடைந்தமாநிலங்களின் செயல்பாடுகளை அறிந்து வர, ஆந்திரஅரசு திட்டமிட்டது. அதன் முதல் முயற்சியாக, ஆறு பேர் கொண்டகுழு, தமிழகத்தில் ஆய்வு செய்ய வந்துள்ளது.
சென்னையின்கல்வி நிலையங்களை ஆய்வு செய்து வந்தஆந்திர மாநில குழுவில், மாநிலஉயர் கல்வி துறை செயலர், ஆர்.எம்.டாப்ரியல், உயர்கல்வி கவுன்சில் துணை தலைவர்விஜயபிரகாஷ், ஜே.என்.டி.யூ., பதிவாளர் ஹேமச்சந்திர ரெட்டி, ஈ.சி.ஈ.டி., கன்வீனர்சாய் பாபு, உயர் கல்விதுறை வழிகாட்டி அதிகாரி டேவிட் குமார்சுவாமி, தொழில்நுட்ப கல்வி துணை இயக்குனர்ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம் பெற்றுஇருந்தனர்.
அந்த குழுவினர், கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்விஇயக்குனர் அலுவலகம், ராணி மேரி கல்லுாரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, அண்ணா பல்கலைஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
பின் அவர்கள் கூறியதாவது:தமிழகத்தின்கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்ய, சென்னைவந்தோம். தமிழகத்தில், பெண் கல்விக்கு அதிகமுக்கியத்துவம் தருகின்றனர். அண்ணா பல்கலையின் நிர்வாகம்சிறந்த முறையில் நடக்கிறது. ரேண்டம் முறை, ஆராய்ச்சிபடிப்புகள், கண்டு பிடிப்புகள் சிறப்பாகஉள்ளன.
தமிழ்நாடுஆசிரியர் கல்வியியல் பல்கலையின் செயல்பாடுகளை பற்றியும் அறிந்து உள்ளோம். அதைஎங்கள் மாநிலத்தில் எடுத்து கூற உள்ளோம். உயர்கல்வி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் மென்திறன் பயிற்சி, அரசு கல்லுாரிகளில் வழங்கப்படும்உதவி தொகை, மடிக்கணினி திட்டங்கள்குறித்தும் ஆந்திர அரசிடம் அறிக்கைஅளிக்க உள்ளோம்.அதை தொடர்ந்து, கர்நாடகா, குஜராத் மாநிலங்களிலும், ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment